பதிவு செய்த நாள்
14
டிச
2018
01:12
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட, ‘லிப்ட்’ எனும் தானியங்கி நடைமேடை, பல ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கிறது. திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். வயதான பக்தர்கள், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, கோவில் நிர்வாகம், 10 ஆண்டுகளுக்கு முன், கோவில் பின்புறத்தில், ‘லிப்ட்’வசதியை ஏற்படுத்தியது. சில மாதங்கள் மட்டுமே இயங்கிய நிலையில், பழுதாகி, ஆறு ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது, லிப்ட் வசதியில்லாததால், வயதான பக்தர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமப்படுகின்றனர். கோவில் முகப்பு வாயிலில் உள்ள, வி.வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழியிலும், 20க்கும் மேற்பட்ட படிகள் உள்ளதால், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே, கோவில் நிர்வாகம், லிப்டை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.