பதிவு செய்த நாள்
17
டிச
2018
04:12
தேனி : தேனி வரதராஜ பெருமாள் கோயில், என்.ஆர்.டி.,நகர் கணேச கந்த பெருமாள் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், பெத்தாட்சி விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில், மூலவர்களான வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி தாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா நாமம் ஒலிக்க சாமி தரிசனம் செய்தனர்.
* பாலசுப்பிரமணியர் கோயிலில் பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
* மீனாட்சியம்மன் கோயில், மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.
* கைலாசபட்டி கைலாசாநார் கோயில், கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
* கம்பம்ரோடு காளியம்மன் கோயில், காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பாம்பாற்று ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர்கோயில், மூலவர் ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
* ஷீரடி சாய்பாபா கோயிலில், சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பிரசாதம் வழங்கப்பட்டது.
* தெற்கு அக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், அகண்ட நாமகீர்த்தனம், விசேஷ திருமஞ்சனம், கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
* வணிக வைசியர் சங்கத்தில், சங்க விநாயகர் கோயிலில் விநாயகருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.
* லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.