பரமக்குடியில் மார்கழி உற்ஸவம் ஆரம்பம்; நாளை (டிசம்., 18ல்) சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2018 04:12
பரமக்குடி : பரமக்குடியில் உள்ள சிவன், பெருமாள் கோயில்களில் மார்கழி உற்ஸவம் நேற்று (டிசம்., 16ல்) துவங்கியது.
மார்கழி மாதம் முழுவதும் கடவுளுக்கு உகந்த மாதம் என்பார்கள். இதன் படி பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று (டிசம்., 16ல்)காலை 5:00 மணிக்கு ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடப்பட்டு, 6:00 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு பகல் பத்து உற்ஸவம் நடந்தது.
இன்று (டிசம்., 17ல்) மாலை 5:00 மணிக்கு பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அவதாரத்தில் அருள்பாலிப்பார்.தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு நடை அடைக்கப் படும். பின்னர் நாளை டிச., 18 காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக பெருமாள் அருள்பாலிப்பார். மேலும் ஈஸ்வரன் கோயிலில் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஆருத்ரா விழாவையொட்டி மணிக்கவாசகர் ஆடிவீதியில் வலம் வந்தார்.
இக்கோயிலில் டிச., 23 அதிகாலை 4:00 மணிக்கு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிேஷகம் நிறைவடைந்து, காலை 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கவுள்ளது. இதே போல் எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள், பரமக்குடி அனுமார்கோயில், மீனாட்சி சுந்தரேஸ் வரர் கோயில், நயினார்கோவில் நாகநாதசுவாமி ஆகிய அனைத்து கோயில்களிலும் மார்கழி மகா உற்ஸவம் துவங்கியது.