பதிவு செய்த நாள்
17
டிச
2018
04:12
* மானாமதுரை : மானாமதுரை சி.எஸ்.ஐ., கல்வி நிறுவன மாணவர் விடுதியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. மானாமதுரை டி.எஸ்.பி., சுகுமாறன்தலைமை வகித்தார். நிர்வாகி பிச்சை வரவேற்றார். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆடை, பரிசுகள் வழங்கப்பட்டன. வேதமுத்து பேசினார். தலைமை காப்பாளர் ராஜா,நிர்வாகிகள் சாம்ராஜ், ஜோசப் பங்கேற்றனர். மாணவர்கள் கலைநிகழ்ச்சி நடந்தது.
* திண்டுக்கல் : உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் டிச.25ம் தேதியை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகின்றனர். அதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், திண்டுக்கல் லிலும் கிறிஸ்து பிறப்பின் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலும் பரவலாக வசிக்கும் கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமஸ் ஸ்டாரை தொங்க விடுவது, குடில்கள் அமைப்பது போன்ற பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் கீத பவனி, கலைநிகழ்ச்சிகள், சிறப்பு பிரார்த்தனைகள், கிறிஸ்து பிறப்பு நற்செய்திகள் நடக்கின்றன.
ஒளிரும் ஸ்டார்கள்: கிறிஸ்தவர்கள் தங்களின் இல்லங்களில் ஸ்டாரை தொங்கி விடுவதற்கு பின்னணி உண்டு. பெத்தலகேம் நகரின் மாட்டு தொழுவில் கிறிஸ்து பிறந்தார். அவரை பார்க்க புறப்பட்ட ஞானிகளுக்கு வானில் தோன்றிய வால் நட்சத்திரம் வழிகாட்டியது. அதன் அடையாளமாகவே இல்லங்களில் ஸ்டாரை தொங்க விடுகிறார்கள்.தற்போது ஸ்டார் விற்பனை களை கட்டி உள்ளது. கிறிஸ்தவர்களை கவர வித, விதமான ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அவை பலவகை வண்ணங்களில் கண்களை வசீகரிக்கின்றன.