திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று இரவு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்ஸவத்தை முன்னிட்டு அத்யயன உத்ஸவம் கடந்த 8 ல் பகல்பத்து உற்ஸவத்துடன் துவங்கியது. தினமும் காலை பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளலும், ஆழ்வார்களுக்கு அருள்பாலித்தலுடன் பகல் பத்து உத்ஸவம் நடந்தது. நேற்று டிச.,17 ல் திருமங்கையாழ்வார் பெருமாள் திருவடி தொழுதலுடன் மோட்சம் அடைதலுடன் பகல் பத்து உற்ஸவம் நிறைவடைந்தது.இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு பெருமாள் மூலவர் சன்னதிக்கு முன் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி சயன கோலத்தில் அருள்பாலிப்பார். இரவு 7:30 மணிக்கு அமர்ந்த நிலையில் ராஜாங்க சேவை அலங்காரத்தில் அருள்பாலிப்பார். 10:00 மணிக்கு உற்ஸவருக்கு ஏகாந்த நிலையில் சிறப்பு அபிேஷக,ஆராதனை நடைபெறும்.இரவு 11:00 மணிக்கு பெருமாள் தேவியருடன் சொர்க்கவாசல் எழுந்தருளி ஆழ்வாருக்கு காட்சியளிப்பார்.முன் மண்டபத்தில் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு மங்களாசாசனம் நடைபெறும். நாளை முதல் ராப்பத்து உற்ஸவம் துவங்கும்.