மயிலம்: மயிலம் அரங்கநாதர் கோவிலில் மார்கழி உற்சவம் துவங்கியது.மயிலம் அரங்கநாத பெருமாள் கோவிலில் மார்கழி உற்சவத்தை முன்னிட்டு நேற்று மாலை 6:00 மணிக்கு அரங்கநாத சுவாமிக்கு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது.