காஞ்சிபுரம்: சகல சித்தி சபரிவாசன் அய்யப்ப சபாவின், இரண்டாம் ஆண்டு மலர் பூஜை விழா, காஞ்சிபுரம் ஆடிசன்பேட்டை செட்டித்தெரு, சகல சித்தி விநாயகர் கோவிலில் நடந்தது.பகவான் பாண்டுரங்க குருசாமி தலைமையில் நடந்த மலர் பூஜையில், விநாயகருக்கு பல்வேறு அபிஷேகமும், அய்யப்பனுக்கு நெய் அபிஷேகமும் நடந்தது.அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற அய்யப்ப பஜனை, ஜோதி தரிசனம் நடந்தது.