Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ... திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
சென்னை பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

19 டிச
2018
11:12

சென்னை: வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை, திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள், திருநீர்மலை ரங்கநாத பெருமாள், தி.நகர் ஏழுமலையான் கோவில்களில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியை, வைகுண்ட ஏகாதசி உற்சவமாக, வைணவர்கள் கொண்டாடி வருகின்றனர். அன்று, திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படும் என்பது, வைணவர்களின் நம்பிக்கை.நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியான, நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, மூலவர் முத்தங்கிசேவை நடந்தது.

அதைத் தொடர்ந்து, மகா மண்டபத்தில் எழுந்தருளிய மூலவருக்கு, சிறப்பு அலங்காரமும், வைர அங்கி சேவையும் நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு, உற்சவர் உள்புறப்பாடு நடந்தது. அதிகாலை, 4:30 மணிக்கு, பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி - பூதேவி நாச்சியாருடன், உற்சவர் பார்த்தசாரதி பெருமாள், நம்மாழ்வாருக்கு காட்சியளித்தார். பக்தர்கள், கோவிந்தா... கோஷத்துடன், பெருமாளை தரிசித்தனர். பின், சடகோபன் நம்மாழ்வாருக்கு மரியாதை செய்யப்பட்டு, வேத திவ்யப் பிரபந்தம் துவங்கியது.காலை, 5:15 மணிக்கு, உற்சவர் சொர்க்க வாசலை கடந்து, பக்தி உலா வந்தார். இதையடுத்து, திருவாய் மொழி மேல் மண்டபத்தில் அமைந்துள்ள, புண்ணிய கோடி விமானத்தில், உற்சவர் எழுந்தருளி, சேவை சாதித்தார். நேற்று இரவு, 10:00 மணிக்கு, உற்சவர் அலங்கார திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து, நம்மாழ்வாருடன், மாட வீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த வைபவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பெருமாளை தரிசித்தனர்.இதேபோல, திருநீர்மலை ரங்கநாத பெருமாள், தி.நகர் ஏழுமலையான், அடையாறு அனந்த பத்மநாப சுவாமி, நங்கநல்லுார் ஹயக்கிரீவர் உள்ளிட்ட, கோவில்களில் நேற்று அதிகாலை, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar