பதிவு செய்த நாள்
19
டிச
2018
12:12
ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா டிச., 26, 27ல் நடக்கிறது. இதையடுத்து நேற்று காலை 4:30 மணிக்கு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகமும், பின்னர் காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் காலை, மாலை பூதபலி நடக்கிறது. டிச.,19 முதல் 25 வரை அஷ்டாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், டிச., 26 மாலை பள்ளி வேட்டை புறப்பாடும், இரவு 9:00 மணிக்கு பள்ளி வேட்டையும், சயன நிகழ்ச்சியும் நடக்கும்.
மறுநாள் (டிச., 27) காலை 8:00 மணிக்கு கோயிலில் இருந்து ஐயப்ப பக்தர்கள் புறப்பட்டு, ரெகுநாதபுரம் வீதிகளின் வழியாக ஆடிப்பாடி, வேடமிட்டு பேட்டை துள்ளலும், கோயில் அருகே உள்ள பஸ்மக்குளத்தில் உற்சவர் ஐயப்பனுக்கு ஆராட்டு விழாவும் சபரிமலை சன்னிதானத்தில் நடப்பதை போன்றே நடத்தப்படுகிறது. அன்று காலை 10:00 மணிக்கு சன்னிதானத்தின் முன்புறம் கொடியிறக்கம் செய்யப்பட்டு, மகா அபிஷேக ஆராதனைகளுக்கு பின் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன்சுவாமி, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.