Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாண்டிக்குடி இராமர் கோயிலில் ... பழமையான கோவில் சீரமைப்பு பழமையான கோவில் சீரமைப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

20 டிச
2018
12:12

அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது.அன்னியூர், மன்னியூர் என்றழைக்கப்படும் அன்னுாரில், 1,300 ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியில், அன்னி என்னும் வேடன், சிவபக்தன், அங்கு மரவள்ளிக்கிழங்கை வெட்டியுள்ளான். வெட்டியபின்பும் கிழங்கு குறையாமல் இருந்தது. இதையடுத்து அதன் வேரை வெட்டியுள்ளான். அதிலிருந்து ரத்தம் வந்துள்ளது.இத்தகவல் அறிந்து சேர மன்னன், தன் பரிவாரங்களுடன் வந்து ரத்தம் வந்த இடத்தில் தோண்டியுள்ளான். மண்ணுக்கு அடியில் சிவலிங்கம் இருந்தது. அதை பெயர்த்து எடுக்க முயற்சித்த போது அது வரவில்லை. அப்போது ஒலித்த அசரீரி, இந்த இடத்தில் கோவில் எழுப்பி வழிபாடுமாறு தெரிவித்தது. இதையடுத்து இங்கு கோவில் எழுப்பப்பட்டதாக ஐதீகம். இங்கு மூலவராய் உள்ள சிவலிங்கத்தின் இருபுறமும் இறக்கைகள் இருப்பது மிகவும் விசேஷமானது.

இக்கோவிலில், 2000ம் ஆண்டில் தேரோட்டம் துவங்கியது. 2004ல் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டது. கோவிலில், முருகப்பெருமான், அருந்தவச்செல்வி அம்மன், விநாயகர், சூரியன், சந்திரன், சனி பகவான், நவகிரகங்கள் உள்ளன.ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தேரோட்டம் நடக்கிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலையில் சுவாமி திருவீதியுலா முக்கிய வீதிகள் வழியாக நடந்தது.நேற்று காலையில் திருமுறை பண்ணிசை பாடல்கள் இசைக்கப்பட்டன. காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிரவை ஆதீனம் குமரகுருபரர் தலைமை வகித்தார். தாசபளஞ்சிக சங்கம் சார்பில், சீர்வரிசையுடன் பெருமாள் கோவிலிலிருந்து பக்தர்கள் மன்னீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.இன்று காலை 7:45 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் உள்பட பல துறவிகள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாலையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar