பதிவு செய்த நாள்
21
டிச
2018
01:12
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே கணியூர் ஐயப்பன் கோவிலில் ஆறாம் ஆண்டு மண்டல பூஜை, கோமாதா, அஸ்வமேத பூஜை நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகள், நாளை (டிசம்., 22ல்)துவங்குகிறது.
நாளை (டிசம்., 22ல்) மாலை, 4:00 மணிக்கு உற்சவ மூர்த்தி செண்டை மேளத்துடன், அமராவதி ஆற்றுக்கு குதிரையில் செல்லுதல், 5:30 மணிக்கு, அமராவதி ஆற்றில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
இரவு, 7:00 மணிக்கு கணியூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள விநாயகர் கோவிலில் குழந்தை ஐயப்ப பக்தர்களுக்கு இருமுடி நிறைத்தல், 8:00 மணிக்கு ஊர்வலமாக கோவிலுக்கு செல்லு தல், 9:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பக்தி இசை நிகழ்ச்சி, இரவு 10:00 மணிக்கு ஹரி வராசனம் இயற்றி கோவில் நடைசாத்தப் படுகிறது.
வரும், 23ம் தேதி, அதிகாலை, 4:45 மணிக்கு ஐயப்ப சுப்ரபாதம் பாடி நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, மகா கணபதி ஹோமம், 7:00 மணிக்கு கோமாதா மற்றும் அஸ்வமேதயாக பூஜை, 8:00 மணிக்கு ஏழு நதியில் இருந்து எடுத்து வந்த, புண்ணிய தீர்த்தம் மற்றும் 24 மூலிகைகளில் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, 8:30 மணிக்கு 108 பால் குட அபிஷேகம், 10:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, 11;00 மணிக்கு ஐயப்ப பக்தர்கள் பஜனை, அன்னதானம் நடக்கிறது.