Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி கோவில்களில் ஆருத்ரா ... பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தில் சுவாமி அருள்பாலிப்பு பண்ருட்டி திருவதிகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை கோவில்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
உடுமலை கோவில்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

24 டிச
2018
03:12

உடுமலை:உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், திருவாதிரை திருநாளையொட்டி, ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாளில் சிவபெரு மான், பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம்வழங்கி அருள் பாலிக்கிறார்.

உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, நேற்று முன்தினம் (டிசம்., 22ல்) நடராஜர் சமேத சிவகாமி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

தொடர்ந்து, நேற்று (டிசம்., 23ல்) அதிகாலை, 4:00 மணிக்கு, 16 வகையான திரவியங்களில், சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், நடராஜர் சமேத சிவகாமி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை, 10:00 மணிக்கு சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வெஞ்சமடை, மங்களாம்பிகை உடனமர் வாஞ்சிநாத ஈஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.

நேற்றுமுன்தினம் (டிசம்., 22ல்), நடராஜர் சமதே சிவகாமி அம்மனுக்கு ஆருத்ரா அபிஷேகம் தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று (டிசம்., 23ல்), காலை, 6:00 மணிக்கு ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.

உடுமலை, ரத்னலிங்கேஸ்வரர் கோவில், கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சுற்றுப்பகுதி சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பு வழிபாடுநடந்தது.

* மடத்துக்குளம்: மடத்துக்குளம் தாலுகா கொழுமத்தில்,சோழர்கள் ஆட்சியில், கட்டப்பட்ட, தாண்டேசுவரர் கோவில் மற்றும் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை திருக்கல்யாணம், ஆருத்ரா தரிசன விழாக்கள் நடக்கும்.

நேற்றுமுன்தினம்(டிசம்., 22ல்) இரவு, 7:00 மணிக்கு சிவகாமி உடனமர் தாண்டேசுவரசுவாமி திருக்கல்யாணம், 8:30 மணிக்கு தீப ஆராதனை நடந்தது. நேற்று (டிசம்., 23ல்), காலை 3:00 மணிக்கு, அபிஷேகம் செய்வதோடு, ஆருத்ரா தரிசன விழா தொடங்கியது. காலை, 6:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மகா தீபாராதனை, 7:00 மணிக்கு சுவாமி திருவீதிஉலா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar