பண்ருட்டி, திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி, நேற்று முன்தினம் (டிசம்., 22ல்) மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் நான்கு மாட வீதியை 16 முறை வலம் வந்து நேர்த்திகடன் செலுத்தினர். மாலை 6:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி ஊஞ்சல் உற்சவத்தில் 16 கால் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 10:00 மணிக்கு பவுர்ணமி பூஜை நடந்தது.