பழநி: சபரிமலை சீசன், தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநிமுருகன் மலைக்கோயிலுக்கு சனி, ஞாயிறு தினங்களில் வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.
நேற்று (டிசம்., 23ல்) ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரத்திற்குமேலாக காத்திருந்தினர்.
மேலும் கேரள கவர்னர் மலைகோயிலுக்கு வருகை தந்ததால் 12:00 மணி பூஜைக்கு அரைமணி நேரம் முன்னதாகவே, பாதுகாப்பிற்காக தரிசன வழிகள் அடைக்கப்பட்டன.
இதனால் பொதுதரிசனவழியில் 4 மணிநேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இரவு தங்கரத புறப்பாட்டில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். கிரிவீதியில் தடைசெய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.