பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருமொழி திருநாள் (பகல் பத்து) உற்சவம் கடந்த 8ம் தேதி துவங்கி கடந்த 17ம் தேதி வரை நடந்தது. 18ம் தேதி திருவாய்மொழி திருநாள் (ராப் பத்து ) உற்சவம் துவங்கி நாளை 27ம் தேதி வரை நடக்கிறது. 7ம் நாள் உற்சவத்தையொட்டி, காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு நித்யபடி பூஜை, மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக உள்புறப்பாடும், இரவு 7:30 மணிக்கு பிரபந்த சேவா கால துவக்கம், 8:30 மணிக்கு பிரபந்த சாற்றுமுறை, இரவு 9:00 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.