பதிவு செய்த நாள்
27
டிச
2018
12:12
குன்னூர்:குன்னூர் ஐயப்பன் கோவிலில், 52வது ஆண்டு மண்டல பூஜையையொட்டி, விளக்கு பூஜை நடந்தது.குன்னூர் ஐயப்பன் கோவிலில், 52வது ஆண்டுமண்டல பூஜை திருவிழா துவங்கியது. நேற்று (டிசம்., 26ல்) அதிகாலை, 5:00 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
ஐயப்பனுக்கு அபிஷேகம், அலங்கார சிறப்பு பூஜை, உஷ பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையை கோவில் ஸ்தாபகர் சங்கர் சுவாமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். அதில், பகவதி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஏராளமான மகளிர் பங்கேற்று திருவிளக்கு பூஜைகளை நடத்தினர். உச்சிகால பூஜையை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று (டிசம்., 27ல்) காலை, 10:30 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து அபிஷேக பொருட்களுடன், தீர்த்தகுட ஊர்வலம் நடக்கிறது. பின்னர் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு திருவீதி உலா, மாலை, 7:00 மணிக்கு புஷ்பாஞ்சலி ஆகியவை நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை ஐயப்ப பக்த சங்கத்தினர், ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.