வால்பாறை:வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதம் முதல் சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி விநாயகருக்கு, நேற்று முன்தினம் (டிசம்., 25ல்) மாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.
தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. இதே போல் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.