Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்கள் நலன்வேண்டி பழநியில் ... சிவகங்கை ஐயப்ப சுவாமி மண்டல பூஜை சிவகங்கை ஐயப்ப சுவாமி மண்டல பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரியன்காவில் தர்மசாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
ஆரியன்காவில் தர்மசாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

28 டிச
2018
12:12

ஆரியன்காவு, கேரள மாநிலம் ஆரியன்காவு தர்மசாஸ்தா கோயிலில் சுவாமி - புஷ்கலா தேவி திருக்கல்யாணம் நேற்றுமுன்தினம்இரவு 9:00 மணிக்கு கோலாகலமாக நடந்தது.அன்னதான பிரபுவான தர்மசாஸ்தா சவுராஷ்டிரா சமூக தேவியை மணந்து கொண்டதாக ஐதீகம். ஆண்டு தோறும் இந்த திருமண விழாவை கொண்டாட ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் மதுரை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருவாங்கூர் மன்னர் மற்றும் தேவசம்போர்டார் சம்பந்தியாக அழைத்து கவுரவிக்கின்றனர். இருவீட்டார் இணைந்து திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு திருக்கல்யாணத்தை முன்னிட்டு கடந்த டிச., 24ல் மாம்பழத்துறையில் எழுந்தருளியுள்ள புஷ்கலாதேவி அம்பாளின் ஜோதி ரூப ஊர்வலம் நடந்தது. தர்மசாஸ்தா கோயில் கருவறையில் ஐயனோடு அம்பாள் ஜோதி ரூபமாக ஐக்கியமாகும் அற்புதம் நடந்தது. பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்தம்டிச.,25ல்நடந்தது.திருக்கல்யாணம் திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம்மதியம் சம்பந்தி விருந்து, மாலை 4:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை 5:30 மணிக்கு கோயில் நாடக மேடையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:00 மணிக்கு காளை வாகனத்தில் சுவாமியும், பூங்கோவில் வாகனத்தில் புஷ்கலாதேவியும் எழுந்தருளினர். இரவு 7:30 மணிக்கு சன்னதியில் சுவாமி, அம்பாளுக்கு சவுராஷ்டிரா சமூகத்தினர் சோமஞ்ஜோடி வழங்கினர். இரண்டு சப்பரங்களும் ஒன்றாக கோயிலை வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்தை அடைந்தன.

கெட்டி மேளம் முழங்கி, பக்தர்களின் ஹரிஓம் புஷ்கலை நாதனே எனும் சரண கோஷம் முழங்க, இரவு 9:00 மணி தர்மசாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.மண்டலாபிஷேகம் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டுநேற்றுகாலை 9:00 மணிக்கு கலசபூஜைநடந்தது. மதியம் 12:00 மணிக்கு சம்பந்தி விருந்து, மதியம் 1:00 மணிக்கு கலசாபிஷேகம், களபாபிஷேகம், மதியம் 2:00 மணிக்கு தர்மசாஸ்தாவிற்கு சர்வராஜ அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி இந்தாண்டுக்கான மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றது.விழாக்களில் தேவசம்போர்டு உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் பிள்ளை,கோயில் நிர்வாக அதிகாரி ஷிபு, கமிட்டி தலைவர் சுரஷே், செயலர் சரசன், மதுரை எம்.எல்.ஏ., சரவணன், சங்கநிர்வாகிகள் கே.ஆர்.ராகவன், எஸ்.ஜே.ராஜன், கண்ணன், ஹரிஹரன், சாந்தாராம், மோகன், சீனிவாசன், கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 3 டன் எடையுள்ள பல்வேறு மலர்களால், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar