பதிவு செய்த நாள்
28
டிச
2018
02:12
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 7:30 மணிக்கு, பவுர்ணமி கிரிவலப்பாதை, கோவிலில் இருந்த உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில், 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காணிக்கையை எண்ணினர். அதில், பக்தர்கள் செலுத்திய, ஒரு கோடியே, 55 லட்சத்து, 81 ஆயிரத்து, 12 ரூபாய், 209 கிராம் தங்கம், 1,456 கிராம் வெள்ளி இருந்தது.