வடமதுரை: திண்டுக்கல், வடமதுரை ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள ஐயப்பன் கோயிலில் 22ம் ஆண்டு மண்டல பூஜை நடந்தது. திருமஞ்சனம், அலங்காரம், அபிஷேக வழிபாடுகள், அன்னதானம் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் ஐயப்ப சுவாமி புறப்பட்டு வடமதுரையின் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலம் நடந்தது. விழா ஏற்பாட்டினை கோயில் தலைவர் ஆர்.கே.பெருமாள், செயலாளர் சண்முகவேலு, தலைமை குருசாமி அழகர்சாமி செய்திருந்தனர்.காணப்பாடி அய்யப்பன் கோயிலில் 30ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அன்னதானம், குத்து விளக்கு பூஜை நடந்தது. இதில் காணப்பாடி மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். விழா ஏற்பாட்டினை கோயில் நிர்வாகிகள் நடராஜன், சுப்பையா மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.திண்டுக்கல்: மலையடிவாரம் ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல பூஜையையொட்டி டிச.27 மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதி உலா புறப்பாடு துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில் முக்கிய வீதிகள் வழியாக சாமி ஊர்வலம் வந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.