பதிவு செய்த நாள்
29
டிச
2018
01:12
திருத்தணி: முருகன் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக, 86.24 லட்சம் ரூபாய், 581 கிராம் தங்கம் கிடைத்தது.திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசிக்கின்றனர்.பக்தர்கள், தங்களது வேண்டுதலை உண்டியலில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.தொடர்ந்து, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, திருவள்ளூர் உதவி ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில், நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் எண்ணினர்.இதில், 30 நாட்களில், 86.24 லட்சம் ரூபாய், 581 கிராம் தங்கம், 7,894 கிராம் வெள்ளி, காணிக்கையாக கிடைத்தன.