விருதுநகர்: விருதுநகரில் ஸ்ரீ ஐயப்பா சுவாமி மண்டல விழா குழு சார்பில் அன்னதானம் நடந்தது. விழா நிர்வாகி கந்தர்சாமி முன்னிலை வகித்தார். சபரிமலைக்கு விரதமிருக்கும் பக்தர்கள் பங்கேற்றனர். ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து ரத்த தான முகாமும் நடந்தது. 20 க்கு மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.