Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை திறப்பு: நெய்யபிஷேகம் ... ராமேஸ்வரத்தில் புனித நீராடும் பக்தர்கள் அவதி ராமேஸ்வரத்தில் புனித நீராடும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
5 நாள் காத்திருந்த கோதண்டராமர் சிலை புறப்பட்டது
எழுத்தின் அளவு:
5 நாள் காத்திருந்த கோதண்டராமர் சிலை புறப்பட்டது

பதிவு செய்த நாள்

31 டிச
2018
11:12

அவலுார்பேட்டை : செஞ்சி அருகே, ஐந்து நாட்களாக காத்திருந்த விஸ்வரூப கோதண்டராமர் சிலை, நெடுஞ்சாலை துறையின் அனுமதி கிடைத்ததால், நேற்று, திருவண்ணாமலை புறப்பட்டு சென்றது.

பெங்களூரு, ஈஜிபுரத்தில் நிறுவ, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த, அகரகொரக்கோட்டை கிராமத்தில், 300 டன் எடையில் வடிக்கப்பட்ட, 64 அடி உயர விஸ்வரூப கோதண்டராமர் சிலை, கார்கோ லாரியில் எடுத்துச் செல்லப்படுகிறது.சிலையின் அகலம் அதிகமாக இருப்பதால், சாலையில் எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த சிலை, 25ம் தேதி பிற்பகல், 2:00 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம், வளத்தி அடுத்த, செல்லபிராட்டை கூட்ரோட்டில், தனியார் கல்லுாரி அருகே, மாநில நெடுஞ்சாலை துறையின் அனுமதிக்காக நிறுத்தப்பட்டது.

மாநில நெடுஞ்சாலை துறையின் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, கன்னலம் பாலத்தின் அருகில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. பென்னகர் மற்றும் வணக்கம்பாடி பாலங்கள் வலுப்படுத்தப்பட்டன.இதையடுத்து, நேற்று பிற்பகல், 1:00 மணிக்கு செல்லபிராட்டையில் இருந்து, வளத்தி வழியாக, கோதண்டராமர் சிலை புறப்பட்டு சென்றது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் எல்லைக்கு, மாலை, 5:30 மணிக்கு சென்றடைந்தது. பின், அங்குள்ள தனியார் கல்லுாரி அருகே, நிறுத்தப்பட்டது. இன்று காலை, அவலுார்பேட்டை வழியாக, திருவண்ணாமலை செல்ல, குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar