Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 5 நாள் காத்திருந்த கோதண்டராமர் சிலை ... திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் திருத்தணி முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் புனித நீராடும் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் புனித நீராடும் பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

31 டிச
2018
11:12

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் புனித நீராட வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். விழா, விடுமுறை நாளில் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 21 தீர்த்தங்களை நீராட தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். கோயிலில் தீர்த்த கிணறுகள் குறுகிய பாதையில் இருந்ததால், நீராடும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர்.

இதனை தவிர்க்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுப்படி, 1 முதல் 6 வரை உள்ள தீர்த்த கிணறுக்கு பதிலாக கோயில் 2ம் பிரகாரத்தில் புதிய கிணறு அமைத்து,  அக்.,28, டிச.,14 ல் புதிய கிணற்றில் புனித நீரை ஊற்றி பிரதிஷ்டை செய்தனர்.  இதன் பின் கோயில் வடக்கு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் நுழைந்து 2ம் பிரகாரத்தில் அடுத்தடுத்து இருந்த 21 தீர்த்தத்தையும் பக்தர்கள் சிரமம் இன்றி 25 நிமிடத்தில் நீராடி சென்றனர். இந்நிலையில் தற்போதைய விடுமுறை நாளில் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் நீராட வருகின்றனர்.  வடக்கு வாசல் முன்பு தடுப்பு வேலி இல்லாததால், நீராட செல்லும் அவசரத்தில் பக்தர்கள் கூட்டமாக முண்டியடித்து செல்கின்றனர். முதியோர், குழந்தைகள், பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். இங்கு பாதுகாப்புக்கு போலீசார், கோயில்  காவலர்கள் இல்லாததால் பக்தருக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வடக்கு வாசல் அருகில் உள்ள கலையரங்கு திடலில் மரதடியில் தற்காலிக தடுப்பு வேலி அமைத்து, பக்தர்கள் பாதுகாப்பாக வரிசையில் சென்று நீராட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar