Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ... லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த குஜராத் சிவன் கோவில்: நெரிசலில் ஏழு பேர் பலி! லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் மகா சிவராத்திரி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 பிப்
2012
11:02

ராமேஸ்வரம்:மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்பாள் தேரோட்டம் நடந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா ஒன்பதாம் நாளான நேற்று சுவாமி அம்பாள் தேரோட்டம் நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறந்து 5 முதல் 5.30 வரை ஸ்படிக லிங்க பூஜை நடந்தது. பின் வழக்கமான பூஜைகளை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாள் கிழக்கு வாசலில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தபின் கோயில் இணை கமிஷனர் ஜெயராமன், தக்கார் குமரன் சேதுபதி, நகராட்சி தலைவர் அர்ச்சுனன், பா.ஜ.,தேசிய குழு உறுப்பினர் முரளீதரன் பெரிய தேரின் வடத்தை பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைக்க, பக்தர்கள் தேரை இழுத்தனர். நான்கு ரதவீதியில் உலா வந்த தேர் பகல் 12.15மணிக்கு நிலைக்கு வந்தது.புனித நீராடல்: மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதசுவாமிக்கு எட்டு கால பூஜையுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஏராளமானோர் புனித நீராடி, கங்கை நீர் கலசங்களுடன் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். ருத்ராபிஷேகமும் நடந்தது. கோயில் இரண்டாம் பிரகாரத்திலுள்ள 108 லிங்கத்திற்கும் சிவராத்திரி விரதம் இருந்த பக்தர்கள் நேற்று காலை முதல் இரவு வரை தங்களது கைகளால் பால், பன்னீர், விபூதி மற்றும் கங்கை நீரால் அபிஷேகம் செய்து சிவனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar