பதிவு செய்த நாள்
02
ஜன
2019
02:01
ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் நேற்று முன்தினம் (டிசம்., 31ல்) திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
நிரந்தர உண்டியல்களில், 44 லட்சத்து, 31 ஆயிரத்து, 352 ரூபாயும்; தட்டு காணிக்கை உண்டியல்களில், 13 லட்சத்து, ஐந்தாயிரத்து, 629 ரூபாயும் வசூலாகியது. மேலும், 195 கிராம் தங்கம் மற்றும் 713 கிராம் வெள்ளி இருந்தது.இதில், கோவில் உதவி ஆணையர் ஆனந்த் தலைமை வகித்தார். திருப்பூர் உதவி ஆணையர் ஹர்ஷினி, பொள்ளாச்சி ஆய்வர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதன்,
திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.