திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஏகாதசி திருமஞ்சனம் நடந்தது.நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் திருமஞ்சனம், நேற்று, காலை, 10:00 மணிக்கு நடந்தது.பின், உற்சவர், வீரராகவ பெருமாள், மாலையில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திருவள்ளூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் வந்து, வீரராகவ பெருமாளை தரிசித்தனர்.