காரைக்கால் சனீஸ்வர பகவான் கோவிலில் உண்டியல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2019 01:01
காரைக்கால்:திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், அன்னதான உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார்.
சனீஸ்வர பகவான் கோவிலில் தங்கத்தேர், அன்னதானம் உள்ளிட்டவைக்கு பக்தர்கள் காணிக்கை அளிக்க, கோவிலில் பல இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.அன்னதானம் உண்டியல் நிரம்பியதை தொடர்ந்து, நேற்று (ஜன.,2ல்)தருமபுர ஆதினம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் அதிகாரி சுந்தர் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் உதவியுடன் காணிக்கை எண்ணப்பட்டது.