வத்திராயிருப்பு:ஜன.5 மார்கழி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு இன்று 3 முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதமும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு பிரதோஷத்திலிருந்து 4 நாட்கள் சதுரகிரி மலைக்கு பக்தர்கள் அனுமதிக்கபடுவர்.
ஜன.5 மார்கழி அமாவாசையை முன்னிட்டு இன்று (ஜன.,3ல்) காலை 6:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட உள்ளனர். இவர்கள் ஜன.6 மாலைக்குள் திரும்பிவிடவேண்டும்.பருவமழையின்றி மலைப்பகுதி வறண்டு இருப்பதால், பக்தர்கள் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.
தண்ணீர் பாக்கெட்டுகள், கேரிபைகளுக்கு அனுமதி கிடையாது, என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.