கடலூர் :கடலூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை உற்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கடலூர், வண்டிப் பாளையம் ரோட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 16ம் தேதி முதல் மயானக் கொள்ளை உற்சவம் நடந்து வருகிறது. நான்காம் நாளான நேற்று திருக்கல்யாண உற்சவத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை சர்வ அலங்காரத்தில் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு 8 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்திலும், தாண்டவராயர் ”வாமி ரிஷப வாகனத்திலும் பாரிவேட்டை உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று பகல் மயானக்கொள்ளை உற்சவம் நடக்கிறது.