பதிவு செய்த நாள்
04
ஜன
2019
02:01
வாலாஜாபேட்டை: காஞ்சி மகா பெரியவர் ஆராதனை விழாவையொட்டி, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று (ஜன.,3ல்), கால பைரவர் கோடி ஜப ஹோமம், ஆரோக்கியம், ஐஸ்வரியம் தரும், 58 யாகங்கள், நேற்று (ஜன.,3ல்) துவங்கின. கோ பூஜை, திருப்பாவை, திருவெம்பாவை வேத பாராயணம், கோடி ஜப ஹோமம் நடந்தது. இதில், முரளிதர சுவாமிகள் தலைமையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஒரு கோடி ஜப ஹோமம் நேற்று (ஜன., 3ல்) துவங்கி, 58 நாட்கள், 58 யாகங்கள் நடக்கின்றன.