பதிவு செய்த நாள்
04
ஜன
2019
03:01
திருத்தணி: திருத்தணி ஒன்றியம் கே.ஜி. கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய கிராமங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று (ஜன., 3ல்) நடந்தன.
காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மதிய ஆரத்தியும், மாலை, 6:00 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர். இதே போல், மேல்திருத்தணி மற்றும் நகரி பகுதியில் அமைந்துள்ள சாய் பாபா கோவில்களிலும், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.