Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை சென்றது விஸ்வரூப ... பழநி பாதயாத்திரை பக்தர்களுக்காக சிறப்பு பூஜை பழநி பாதயாத்திரை பக்தர்களுக்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுனை தண்ணீரில் புதைந்த சிவலிங்கம்: 162 ஆண்டுக்கு பின் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சுனை தண்ணீரில் புதைந்த சிவலிங்கம்: 162 ஆண்டுக்கு பின் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

05 ஜன
2019
12:01

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, 30 அடி ஆழ சுனை தண்ணீரில் புதைந்த லிங்கத்தை, தண்ணீரை இறைத்து பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். புதுக்கோட்டை அருகே, நார்த்தாமலை உட்பட பல மலைகள் உள்ளன. நார்த்தாமலையில் சுனைலிங்கம் உள்ளிட்ட இந்த மலையில், பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்த பகுதி, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கிருக்கும் வரலாற்றுச் சின்னங்கள், கி.பி., 7 - 9ம் நுாற்றாண்டு பழமை வாய்ந்தது.இங்குள்ள மேலமலை விஜயாலய சோழீச்சுரம் கோவிலுக்கு செல்லும் வழியில், தலையருவி சிங்கம் சுனை உள்ளது. இது கிட்டத்தட்ட, 30 அடி ஆழம் உடையது.

தொல்லியல் துறை: இந்த சுனைக்குள் ஜீரஹரேஸ்வரர் என்னும் லிங்கம் உள்ளது. 1857ல் ராஜா ராமச்சந்திர தொண்டைமான் சுனையின் நீரை இறைக்கச்செய்து, இந்த லிங்கத்திற்கு வழிபாடு நடத்தியதாக, அங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. அதன்பின் இந்தச் சுனை, எப்போதும் நீர் நிரம்பியே காணப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன், வறட்சியின் காரணமாக விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பொருட்டு, இந்தச்சுனை நீரை இறைக்க ஆரம்பித்து உள்ளனர். ஆனால், அதைப் பாதியிலேயே தொல்லியல் துறை தடுத்து நிறுத்தி விட்டது. அதன்பின், தற்போது தொல்லியல் துறை அனுமதியோடு, டிச., 31ம் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து, நீர் இறைக்கும் மோட்டார்கள் உதவியுடன், சுனை நீரை இறைக்கும் பணியில், ஆன்மிக அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

எத்தனை நாட்கள் : நார்த்தாமலையில், 162 ஆண்டுகளுக்குப் பின் வெளிப்பட்ட லிங்கத்தை, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். வரும் நாட்களில் மழை பெய்தால், மீண்டும் இந்த, 30 அடி சுனையில் நீர் நிரம்பிவிடும். பின், இந்த சுனை லிங்கத்தை வழிபாடு செய்ய, எத்தனை நாட்கள் ஆகும் என்பது தெரியவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை;  புலி வாகனன் ஐயப்பனை சபரிமலை சென்று தரிசனம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஐயப்பன் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; வடகுரு ஸ்தலமான தட்சிணாமூர்த்தி கோவிலின் பாலாலயம் விமரிசையாக நடந்தது. திருவொற்றியூர், ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தட்சிணாயன புண்ணிய கால ஆரம்ப வைபவ பூஜை நடைபெற்றது.கோவை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி‌ ... மேலும்
 
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar