பதிவு செய்த நாள்
05
ஜன
2019
02:01
வால்பாறை: வால்பாறை கோவிலில் நடந்த பிரதோஷ பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதருக்கு கார்திகை மாதம் மூன்றாவது பிரதோஷ பூஜை நேற்று முன் தினம் (ஜன., 3ல்) நடந்தது.
மாலை, 6:00 மணிக்கு சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், அரிசிமாவு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜை செய்யப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காசிவிஸ்வநாதர் தேவியருடன், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.