பதிவு செய்த நாள்
06
ஜன
2019
01:01
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா ஜன.,8ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருவிழா துவங்கும் வகையில் ஜன.,7ல் தேங்காய் தொடும் முகூர்த்தம், அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடக்கிறது. ஜன.,8 காலையில் சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளுவர். காலை 11:00 முதல் 11:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. திருவிழா நடக்கும் ஜன.,17வரை தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி வீதி உலா வருவர்.முக்கிய நிகழ்ச்சியாக ஜன.,16ல் தை கார்த்திகை, அன்று காலை தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி முடிந்து 16 கால் மண்டபம் முன்பு உள்ள சிறிய வைரத்தேரில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கும். ஜன.,17 மிதவை தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பத்திருவிழா நடக்கும்.இரவு சன்னதி தெருவில் எழுந்தருளியுள்ள சொக்கநாதர் கோயில் முன்பு சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடக்கும்.