Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மார்கழி அமாவாசை: அக்னி தீர்த்த ... விஸ்வரூப கோதண்டராமர் சிலைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாசநாதர் கோயில் கும்பாபிேஷகம் எப்போது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2019
02:01

சாயல்குடி:சாயல்குடியில் பழமையும், புரதான சிறப்பும் பெற்ற மீனாட்சி சமேத கைலாசநாதர் கோயில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. கும்பாபிேஷகம் நடந்து 100  ஆண்டுகளை கடந்த நிலையில் பராமரிப்பின்றி உள் மற்றும் வெளி பிரகாரங்கள் சிதிலமடைந்து வருகிறது.பல்லவர் காலத்திற்கு பின் பாண்டியர்கள், சேதுபதி மன்னர்கள் கோயிலில் திருப்பணி  செய்துள்ளனர்.இங்கு கைலாசநாதர் சிவன், மீனாட்சி அம்மன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருக்கின்றனர். ஆண்டிற்கு ஒருமுறை சிவராத்திரி நாளில் மட்டும் பக்தர்கள்  மூலஸ்தானத்திற்கு அருகே உள்ள வட்ட வடிவமான பிரகாரச்சுற்றுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். கடற்பாறை கற்கள் மற்றும் கருங்கல்லினால் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பழமையான சுதை சிற்பங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது. ஒரு ஏக்கரில் அமைந்த சிவன் கோயிலுக்கு முன்பு 3 ஏக்கரில் கைலாசநாதர் கோயில் தெப்பக்குளம் உள்ளது.பக்தர்கள் கூறியதாவது;  கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 100 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு பக்தர்களின் நன்கொடையால் பொலிவு மாறாமல் திருப்பணிகள்  செய்யப்பட்டது.ராமநாதபுரம் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள 54 கோயில்களில் இந்த சிவாலயமும்ஒன்றாகும்.ஆனால் இதுவரை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு எந்த சூழ்நிலையும் அமையாமல்  உள்ளது. மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு, சங்கடகர சதுர்த்தி, சஷ்டி, மாதாந்திர சிவராத்திரி, அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய நித்திய பூஜைகள் கோயில் ஸ்தானிக குருக்கள் மூலம்  நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம், ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar