Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை கோயிலில் அரிதான பாண ... பழநியில் அலகு குத்தி பக்தர்கள் பாதயாத்திரை பழநியில் அலகு குத்தி பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் மலர் காவடி திருவிழா
எழுத்தின் அளவு:
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் மலர் காவடி திருவிழா

பதிவு செய்த நாள்

07 ஜன
2019
11:01

சாத்துார்:துாத்துக்குடி மாவட்டம் கழகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று மலர்காவடித்திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர்- துாத்துக்குடி மாவட்ட முருகபக்தர்கள் பேரவை அறக்கட்டளை மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து 6 ம் ஆண்டு மலர்க்காவடி (பூச்சொரிதல்) விழா நேற்று காலை 11:30 மணிக்கு நடந்தது. முன்னதாக காலை 5:30 மணிக்கு கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

கிரிவல யாத்திரை துவக்கம்: மயிலம் ஆதீனம் சிவஞானபாலயசுவாமிகள், தமிழ்நாடு முருகபக்தர்கள் பேரவை அறக்கட்டளை கோவை கெளமார மடாலயம் குமரகுருபரசுவாமிகள், செங்கோல்ஆதீனம் சிவபிரகாசதேசிக சத்தியஞான பரமாச்சதர்ய சுவாமிகள், கல்லிடைகுறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பராமச்சார்ய சுவாமிகள், கூனம்பட்டி கல்யாணபுரிஆதீனம் ராஜசரவண மாணிக்க வாசக சுவாமிகள் அருளாசி ஆற்றி 1008 மலர் காவடிதிருவிழாவையும் கிரிவல யாத்திரையை துவக்கி வைத்தனர்.

அரோகரா கோஷம்: யானை, குதிரை, மற்றும் மேளதாளம் முழங்க பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் கிரிவலம் வந்து கோயிலை அடைந்தனர். 12:45 மணிக்கு சுவாமிக்கு மலர் சொரிதல் அபி ஷேகம் நடந்தது. இதன் பின் மகாதீபாராதனை நடந்தது. பக்தர்கள் முருகனுக்கு ஆரோகரா கோஷமிட்டுவணங்கினர். திருச்செந்துார் ஆண்டவர் அன்னதானம் அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சாத்துார்,சிவகாசி, வெம்பக்கோட்டை, கோவில்பட்டி, சங்கரன் கோவில், ராஜபாளையம், திருத்தங்கல், ஸ்ரீவில்லிப்புத்துார்,விருதுநகர், திருவண்ணாமலை, பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், தொழில்அதிபர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சிதம்பரம் ; கேரளா, உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பாபு சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம் அருகே பவுர்ணமிகாவு கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: மதுரை சித்திரைத்திருவிழா நிறைவுற்று கள்ளழகர் அழகர்கோவில் திரும்புவதை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் கோவிலில் விக்ரகங்கள் கிடையாது. ஒக்கலிக கவுடர் சமுதாயத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar