பதிவு செய்த நாள்
07
ஜன
2019
11:01
பழநி: தைப்பூசவிழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் பாத யாத்திரை பக்தர்கள் அலகு குத்தி, காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.பழநி தைப்பூச விழா ஜன.,15 முதல் 24 வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு மதுரை, சிவகங்கை, நாமக்கல், சேலம் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பாத யாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் மதுரை, குன்னுார் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பக்தர்கள் 3 அடி முதல் 20 அடி வரை நீளமுள்ள அலகு குத்தியும், மயில், பால் காவடிகள் எடுத்தும் கிரிவீதியை வலம் வந்தனர். நேற்று தைப்பூச சீசன் காரணமாவும் ஞாயிறு விடுமுறை என்பதாலும் திரண்ட பக்தர்கள் மலைக்கோயிலில் 3 முதல் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். சிலர் தடுப்புகளில் ஏறி குதித்து செல்வதால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. பாதுகாவலர்கள் மூலம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.