நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2019 02:01
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு நரியன்ஓடை கரையில் உள்ள பாதாளகாளி மற்றும் பிரத்தியங் காரதேவி கோவிலில் நேற்று (ஜன., 6ல்) மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது.பூஜையை முன்னிட்டு நேற்று (ஜன., 6ல்) மதியம் 12:00 மணிக்கு கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு, யாக வேள்விகள் ஆரம்பிக்கப்பட்டது.
மதியம் 1:30 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல்கள் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது. தொடர்ந்து வேள்வியில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு கலச அபிஷேகம் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து 2:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.