பதிவு செய்த நாள்
07
ஜன
2019
03:01
உடுமலை:உடுமலை, புனித செபஸ்தியர் கத்தோலிக்கா தேவாலயத்தில், ஆரோக்கிய அன்னை, புனித செபஸ்தியர் மற்றும் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருநாள், திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.தேவாலயத்தில், இத்திருநாள், டிச., 30 ம்தேதி மாலை, திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, டிச.,31ம் தேதி காலை, நவநாள் பிரார்த்தனை நடந்தது.புத்தாண்டு துவக்க பிரார்த் தனை,திருப்பலி நடந்தது. ஜன., 4ம் தேதி மாலையில் அம்பு ஆசீர்வதித்தல் நடந்தது. ஜன., 5ம்தேதி காலை, அம்பு வீடுகளுக்கு எடுத்துசெல்லும் நிகழ்ச்சி மற்றும் மாலையில், திருப்பலி நடந்தது.நேற்று (ஜன., 6ல்), கூட்டு திருப்பலி மற்றும் சொரூப திருப்பவனி நடந்தது. இதில், திரளானவர்கள் பங்கேற்றனர். திருவிழா நிகழ்ச்சிகள் இன்று 7ம் தேதி, மாலையுடன், நிறைவடைகிறது.