குமாரபாளையம் அனுமன் ஜெயந்தி விழா ஆன்மிக சொற்பொழிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2019 03:01
குமாரபாளையம்: குமாரபாளையம், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பவானி குருபிரசாத்,ராமாயண காவியத்தில் சுந்தர காண்டம் குறித்து பேசினார்.
இவர் பேசுகையில், ராமாயணத்தில் அனுமன் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. சீதா தேவியை சந்தித்து வர செல்லுதல், சஞ்சீவி மலையை எடுத்து வருதல், ராமபிரானை தன் இதயத்தில் வைத்து பூஜித்தல் உள்ளிட்ட பல செயல்களை செய்யும் போது, ராம பக்தர்கள் தன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய நல்ல படிப்பினை உண்டாக்கியது, என்றார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.