கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2019 03:01
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது. கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகர் பத்ரகாளியம்மன் கோவிலில் மார்கழி அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் (ஜன., 5ல்) மாலை பத்ர காளியம்மன், பெரியநாயகி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்து, நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது.
பெண் பக்தர்கள் குங்குமார்ச்சனை செய்து பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த நிகும்பலா யாகத்தில் மிளகாய் நெடி சிறிதும் இன்றி பக்தர்கள் தோஷ நிவர்த்தி செய்து பத்ரகாளியம்மனை வழிபட்டனர்.