கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் கண்ணாடி அறை உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2019 11:01
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் கண்ணாடி அறை உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தனுர் மாத உற்சவம் நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து பள்ளியறை எனும் கண்ணாடி அறை உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. மாலையில் பெருமாள், தாயார், உபயநாச்சியார் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, கண்ணாடி அறைக்குள் எழுந்தருள செய்தனர். பட்டாடைகள் உடுத்தி, நகைகள் அணிவித்து, சிறப்பு மலர் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. பழ வகைகள், இனிப்பு, பலகாரங்கள் பள்ளி அறைக்குள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்தபின் அறை கதவுகள் சாத்தப்பட்டது.நேற்று அதிகாலை சுப்ரபாத சேவை, பசு பூஜை, விஸ்வரூப தரிசனம் நடத்தி, பள்ளி அறை திறக்கப்பட்டது. விஷ்ணு சகஸ்ரநாம மந்திரங்களை வாசித்து பூஜைகள் செய்து, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். போகிப்பண்டிகை அன்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.