பதிவு செய்த நாள்
08
ஜன
2019
12:01
பழநி: மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, பழநி முருகன்கோவில், ரோப் கார் நாளை நிறுத்தப்படுகிறது. பழநி மலைக்கோவிலுக்கு பக்தர்கள், மூன்று நிமிடத்தில் எளிதாக சென்று, வரும் வகையில் தினமும், ரோப்கார் இயக்கப்படுகிறது. இது மாதந்திர பராமரிப்பு பணிக்காக, நாளை மட்டும் நிறுத்தப்படுகிறது. உருளைகள், கம்பிவடம், பெட்டிகளை கழற்றி ஆயில், கிரீஸ் இடும் பணி நடைபெற உள்ளது. பின் ஒவ்வொரு பெட்டிகளிலும் குறிப்பிட்ட அளவு எடைக்கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதில், பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதி செய்தபின், நாளை மறுநாள் முதல், ரோப் கார் வழக்கம்போல இயக்கப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.