Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கழுக்குன்றத்தில் நாளை ... ராமேஸ்வரத்தில் புதைந்த 30 புனித தீர்த்தங்கள் புதுப்பிப்பு ராமேஸ்வரத்தில் புதைந்த 30 புனித ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை எருமேலி பேட்டை துள்ளல்: 12-ல் திருவாபரணம் புறப்பாடு
எழுத்தின் அளவு:
நாளை எருமேலி பேட்டை துள்ளல்: 12-ல் திருவாபரணம் புறப்பாடு

பதிவு செய்த நாள்

10 ஜன
2019
11:01

சபரிமலை: சபரிமலையில் மகர விளக்குக்கு நான்கு நாட்கள் உள்ள நிலையில், எருமேலி பேட்டை துள்ளல் நாளை நடக்கிறது. நாளை மறுநாள் பந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்படுகிறது.சபரிமலையில் மகரஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் நிற்கும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். புல்மேட்டில் 1800 போலீசார் பாதுகாப்பளிக்க உள்ளனர். பி.எஸ்.என்.எல். தற்காலிக டவர் அமைக்கப்படுகிறது.சன்னிதானத்தில் அன்னதான மண்டபத்தின் மேல்பகுதி, பாண்டித் தாவளம், மாளிகைப்புறம், அரவணை கவுன்டர் பகுதி, தேவசம்போர்டு அலுவலகம் என ஒன்பது இடங்களில் ஜோதி தரிசனத்திற்கு வசதி செய்யப்படுகிறது.சன்னிதானத்தில் மட்டும் மூவாயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பம்பை ஹில்டாப்பில் ஜோதி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக நேற்று ஆய்வு நடைபெற்றது.பேட்டை துள்ளல்மகரவிளக்குக்கு முன்னோடியாக நடைபெறும் அம்பலப்புழா, ஆலங்காடு குழுவினரின் பேட்டை துள்ளல் சிறப்பு பெற்றதாகும். இந்த பேட்டை துள்ளலுக்கு பின்னர் இங்கு பேட்டைதுள்ளல் நடைபெறாது. நாளை பகல் 12:30க்கு மணி வாக்கில் அம்பலப்புழா பக்தர்களும், மாலை மூன்று மணிக்கு ஆலங்காடு பக்தர்களும் பேட்டை துள்ளல் நடத்துவர். பின்னர் இவர்கள் பெருவழிப்பாதை வழியாக பம்பை செல்வர்.திருவாபரணம்மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் நாளை மறுநாள் பந்தளத்திலிருந்து புறப்படுகிறது.அன்று காலை முதல் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும். மதியம் உச்சபூஜைக்கு பின்னர் பெட்டிகளில் வைக்கப்பட்டு தலைசுமையாக புறப்படும்.14-ம் தேதி மாலை 6:30 மணிக்கு திருவாபரணம் சன்னிதானம் வந்தடையும். திருவாபரணங்கள் அணிவித்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடைபெற்ற சில நிமிட நேரங்களில் பொன்னம்பலமேட்டில் ஜோதி காட்சி தரும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar