பதிவு செய்த நாள்
10
ஜன
2019
01:01
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறும் பூஜைகள், ஆர்ஜித சேவைகள் குறித்து, மலைக்கோவில் மற்றும் விடுதிகளில், ஒலி பெருக்கி மூலம்பக்தர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர்.கோவிலில் நடைபெறும் பூஜைகள், ஆர்ஜித சேவைகள் மற்றும்கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு ஏற்படுத்தியுள்ள வசதிகள்குறித்து மலைக்கோவில் மற்றும் தேவஸ்தான விடுதிகளில், அறிவிப்பு பலகை வைத்துள்ளது.
மேலும், மலைக்கோவில் வளாகம், வாகன நிறுத்துமிடம், தேவஸ்தான விடுதிகள் ஆகிய இடங்களில், கூம்பு வடிவிலான ஒலிபெருக்கிகளும், மலைக்கோவிலில் செவ்வக வடிவிலான ஒலிபெருக்கி என, மொத்தம், 20 ஒலி பெருக்கி மூலம், காலை, 6:00 மணி முதல், இரவு, 8:45 மணி வரை, தொடர்ந்து முருகன் தொடர்பான பக்தி பாடல்கள் ஒலிபரப்பாகின.இந்நிலையில், நேற்று முதல், பக்தி பாடல்களுடன் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை, முருகன் கோவிலில், தினசரி நடைபெறும் பூஜைகள், நேரம் மற்றும் ஆர்ஜித சேவைகளுக்கான கட்டண விபரம், தேவஸ்தான விடுதிகளில் உள்ள வசதிகள் உட்பட பல்வேறு வசதிகள் குறித்து, பக்தர்கள் பயன் பெறும் வகையில் ஒலிபரப்பி வருகிறது.மேலும், பக்தர்கள் புகார்கள் தெரிவிக்கவும், ஆர்ஜித சேவைகள் முன்பதிவு செய்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மற்றும் முகவரியும்ஒலிபரப்பப்படுகிறது.இதனால், மூலவரை தரிசிக்க வரும் பக்தர்கள், கோவிலில் நடக்கும் பூஜைகள் மற்றும் ஆர்ஜித சேவைகள் குறித்து எளிதாக அறிந்து கொள்ளலாம்.இது பக்தர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.