பதிவு செய்த நாள்
11
ஜன
2019
12:01
பழநி, பழநி முருகன்கோயில் உண்டியலில், 14 நாட்களில் ரூ. ஒரு கோடியே 62 லட்சத்து 77 ஆயிரம் வசூலாகியுள்ளது.தைப்பூச விழா, சபரிமலை சீசனை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள், வெளியூர்பக்தர்களின் வருகை அதிகரித்துள் ளது. இதனால் 14 நாட்களில் நிரம்பிய உண்டியல்கள் திறக்கப்பட்டு, கார்த்திகை மண்டபத்தில் எண்ணும் பணி நடந்தது.ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 62லட்சத்து 77ஆயிரத்து 870, தங்கம்- 333 கிராம், வெள்ளி -6 ஆயிரத்து 980 கிராம், சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாட்டு கரன்சிகள்-300 கிடைத்துள் ளது. இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மதுரை மண்டல இணை ஆணையர் பச்சையப்பன் உட்பட பலர் பங்கேற் றனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை தொடர்கிறது.