Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பம்பைக்கு தமிழக பஸ்கள் ... இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீர்ப்புக்கு எதிராக போராடியவர்கள் திருவாபரண பவனியில் வர தடை பக்தர்கள் கொந்தளிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2019
03:01

சபரிமலை: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போராடியவர்கள் திருவாபரண பவனியில் பங்கேற்க முடியாது என பத்தணந்திட்டை எஸ்.பி. அறிவித்துள்ளதால் புதிய பிரச்னை உருவாகியுள்ளது. திருவாபரண பவனி நாளை பகல் பந்தளத்தில் இருந்து புறப்படுகிறது. இது குறித்து நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், பவனிக்கு கூடுதல் பாதுகாப்பளிக்கவும், அரண்மனை நிர்வாகம் பரிந்துரைப்பவர்களை பவனியில் அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பத்தணந்திட்டை எஸ்.பி. நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராடியவர்கள், சபரிமலை தொடர்பான போராட்ட வழக்குகளில் சிக்கியவர்கள் பவனியில் செல்ல முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

புதிய சிக்கல்: திருவாபரண பவனி மூன்று பிரிவுகளாக செல்லும். முதலில் திருவாபரண பெட்டியும், அதனுடன் செல்பவர்களும், அடுத்து மன்னர் பிரதிநிதியும், அவருடன் செல்பவர்களும், மூன்றாவதாக பவனியை பின்தொடரும் பக்தர்களும் செல்வார்கள்.தீர்ப்புக்கு எதிராக நடைபெற்ற பல போராட்டங்களிலும் அரண்மனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெண் சுவருக்கு எதிராக நடைபெற்ற ஐயப்ப ஜோதியில் இந்த ஆண்டுக்கான மன்னர் பிரதிநிதி ராகவவர்மாவும் கலந்து கொண்டார். எஸ்.பி.யின் இந்த உத்தரவு மன்னர் குடும்பத்துக்கும் பொருந்துமா என தெளிவு படுத்தப்படவில்லை.மூன்றாவது பிரிவில் சபரிமலை வழக்கில் சிக்கிய எவரும் செல்லக்கூடாது என்பதே போலீசின் திட்டம். இந்த உத்தரவு புதிய சர்ச்சையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத மஹாப்பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.நீலகிரி ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் ... மேலும்
 
temple news
பல்லடம்; காமநாயக்கன்பாளையத்தில், சப்த நதிகளின் தீர்த்தங்கள் வைத்து, மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar