சாத்துார்: சாத்துார் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது.இக் கோயில் காணிக்கை உண்டியல்கள் நேற்று மடப்புரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி, விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிகரன் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது. ஒம் சக்தி வார வழிபாட்டுக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் காணிக்கை பொருட்களை கணக்கிட்டனர். கடந்த ஒரு மாதக்காலத்தில் ரூ . 5 லட்சத்து 36 ஆயிரத்தி 252 , 193 கிராம், தங்கம் 651 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.