பதிவு செய்த நாள்
11
ஜன
2019
04:01
பல்லடம்:பல்லடம் தமிழ் சங்கத்தின் சார்பில், மார்கழி உற்சவ விழா, பொங்காளியம்மன் கோவிலில் நடந்து வருகிறது.இதில், நேற்று திருவாசக தேன் எனும் தலைப்பில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி திருமடம் சுந்தரராஜ அடிகளார் பேசியதாவது:ஆங்கிய மோகம் காரணமாக, திருப்பாவை, திருவெம்பாமை உட்பட சிறப்பு மிக்க நுால்கள் குறித்து, குழந்தைகளுக்கு தெரியாமலேயே போனது. டிவி, மொபைல் போன் மூலம், நமக்கே தெரியாமல், எதிரிகள் நம் வீட்டுக்குள் நுழைகின்றனர்.குழந்தைகளிடம் அன்பையும், கண்டிப்பையும் கலந்து காட்டுங்கள். முழு இறைபக்தி நம்மிடம் இருந்தால், இறைவன் நிச்சயம் நம்முடன் இருப்பார். பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, பூஜிக்க வேண்டும் என்பதில்லை. அன்பாக எதை கொடுத்தாலும் கடவுள் ஏற்பார்.நம் நாட்டிலுள்ள கோவில்களுக்கு, தங்களால் இயன்றதை செலவு செய்து, நம் முன்னோர், வழிபட்டு பாதுகாத்து வந்தனர். ஏனெனில், அன்று கோவில், கோர்ட், மருத்துவமனை ஆகியன ஆன்மிக அறிவை போதிக்கும் பள்ளிகளாக இருந்தன.இவ்வாறு, அவர் பேசினார்.